ஆதாரங்களை சேதப்படுத்தும் முன்னர் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்! அம்பிகா சற்குணநாதன்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆதாரங்களை சேதப்படுத்தும் முன்னர் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்! அம்பிகா சற்குணநாதன்

அம்பிகா சற்குணநாதன்

குடிபோதையில் அமைச்சர் சிறைச்சாலைக்குள் நுழைந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.


இந்த சம்பவங்களின் போது சிசிடிவி ஆதாரங்களை உடனடியாக சேதப்படுத்துதல் அல்லது அழிக்கும் செயற்பாட்டை உடனடியாக தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார்.


ஒரு சராசரி குடிமகன் இந்தச் செயலைச் செய்திருந்தால், அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலிடப்பட்டிருப்பர் என்பதையும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டினார்.


செல்வாக்கு மிக்க இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது நண்பர்களுடன் மதுபோதையில், வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்து சிறை மற்றும் தூக்கு மேடைக்குச் சென்றதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.


இதேவேளை குடிபோதையில் இருந்த இராஜாங்க அமைச்சர் கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை துப்பாக்கி முனையில் மண்டியிடச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தினார் என்ற செய்தியும் வெளியாகிய நிலையில் அம்பிகா சற்குணநாதன் இதனை தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.