கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களுக்கு நெருங்கிய தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறும் உத்திகளை தொடர்பான சுகாதார அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் சுகாதாரத் துறை, அத்தியாவசிய சேவைகள் மற்றும் பிற துறைகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கே இவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய மூலோபாயத்தின்படி, சுகாதாரத் துறை மற்றும் அத்தியாவசிய சேவைத் துறைகளில் உள்ளவர்கள் தொற்று மற்றும் அறிகுறி தென்பட்டால்10 நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். ஏனைய அனைவருக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இத்திருத்தம் 2021 ஆகஸ்ட் 30ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுடன் கூடுதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(யாழ் நியூஸ்)