அல்லாஹ்வை இழிவுபடுத்தினால் நடப்பது இது தான் !!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அல்லாஹ்வை இழிவுபடுத்தினால் நடப்பது இது தான் !!!

இலங்கையில் மீண்டுமொரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கிலா, கலகொட அத்தே ஞானசார தேரர், அல்லாஹ்வை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்லாமியர்களின் வணக்கத்திற்குரிய இறைவனான அல்லாஹ்வை இழிவுபடுத்தினால் அதற்கு எதிராக இஸ்லாமிய இளைஞர்கள் உயிரையும் துச்சமென மதித்து போராடுவார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் ‘அடிப்படைவாத தாக்குதல்தாரிகளை உருவாக்கும் சூத்திரதாரி அல்லாஹ்வே என தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்தி தேரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.

முறைப்பாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார், கலகொட அத்தே ஞானசார தேரரின் கருத்தின் நோக்கம் குறித்து சந்தேகம் வெளியிட்டார்.

-ஐபிசிதமிழ்



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.