வவுனியாவில் இருந்து ஏ9 வீதி ஊடாக பயணித்த பிக்கப் வாகனமும் வவுனியா நோக்கி வந்த டிப்பர் வாகனனும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கனகராயன்குளம் சந்திக்கு அண்மையில் கட்டுப்பாட்டை இழந்து குறித்த வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். மரணமடைந்த மற்றும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் கப்ரக வாகனத்தில் பயணித்த 50 வயதான நபர் உயிரிழந்ததுடன், அதன் சாரதி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து கனகராயன்குளம் போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். மரணமடைந்த மற்றும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் கப்ரக வாகனத்தில் பயணித்த 50 வயதான நபர் உயிரிழந்ததுடன், அதன் சாரதி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து கனகராயன்குளம் போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.