VIDEO: வீதிகளில் மக்கள் இறக்கின்றனர் - நாட்டின் சுகாதாரம் அத்துமீறிவிட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: வீதிகளில் மக்கள் இறக்கின்றனர் - நாட்டின் சுகாதாரம் அத்துமீறிவிட்டது!

இன்று நாட்டின் சுகாதார அமைப்பின் திறன் மீறப்பட்டுள்ளதாக இலங்கையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

தற்போது மக்கள் வீதிகளில் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டை மீண்டும் மூடுமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கமாட்டேன் என்று கூறிய அவர், நிலைமையைப் புரிந்துகொண்டு சுய பயணக் கட்டுப்பாடுகளை தங்களுக்குள் விதிக்குமாறு மக்களை வலியுறுத்தினார்.

தனது வாழ்க்கையில் ஆசை இருந்தால், வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

மக்களின் இறப்பதின் மூலம் பொருளாதாரத்தை வளர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

ஒரு இணையவழி சேனலில் கலந்துரையாடலில் பங்கேற்ற போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.