தலிபான் ஆட்சியை கைப்பற்றும் தருவாயில் - இலங்கை பிரஜைகளை நாட்டுக்கு அழைத்து வர இலங்கை அரசு தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தலிபான் ஆட்சியை கைப்பற்றும் தருவாயில் - இலங்கை பிரஜைகளை நாட்டுக்கு அழைத்து வர இலங்கை அரசு தீர்மானம்!

ஊடக அறிக்கை

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை பிரஜைகளை நாட்டுக்கு அழைத்து வரும் முயற்சிகள்


ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கை பிரஜைகளை நாட்டுக்கு அழைத்து முயற்சிகள் குறித்து வெளிவிவகார அமைச்சு பின்வருவனவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறது:

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப் பிரஜைகள் அவர்கள் நாடு திரும்ப விரும்புவதாக இருந்தால் அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கு சர்வதேச ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து வெளிவிவகார அமைச்சு தற்போது செயற்படுகின்றது.

காபூலில் உள்ள இலங்கை தூதரகமானது, ஹோட்டல் ஒன்றில் இருந்து செயல்பட்டு வருகிறது, தற்போது தூதரகர்தில் இலங்கை பிரஜைகள் எவரும் இல்லை மற்றும் உள்ளூர் ஊழியர் ஒருவரினால் நிர்வகிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் உள்ள நாற்பத்தி மூன்று (43) இலங்கை பிரஜைகளின் விவரங்களை தூதரகம் வைத்திருக்கிறது, அதே நேரத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) சில விவரங்களையும் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் இலங்கை பிரஜைகள் பெரும்பாலும் ஐக்கிய நாடுகள், சர்வதேச அமைப்புகள், நேட்டோ இராணுவத் தளங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறார்கள்.

வெளிவிவகார அமைச்சு நிலைமையை மதிப்பிட்டுள்ளது மற்றும் அவர்கள் திரும்பி வர விரும்பினால், இலங்கை பிரஜைகள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.

வெளியுறவு அமைச்சகம்
கொழும்பு
15 ஆகஸ்ட், 2021

-தமிழாக்கம் யாழ் நியூஸ்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.