HIGH COVID ALERT: நாட்டின் சுகாதார நிலைமை குறித்து வெளியான பரபரப்பு செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

HIGH COVID ALERT: நாட்டின் சுகாதார நிலைமை குறித்து வெளியான பரபரப்பு செய்தி!


அடுத்த சில நாட்களில் நாட்டில் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 5,000 ஐ தாண்டும் என்றும் தினசரி இறப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிப்பதாக ஆங்கில பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய கொரோனா பரவல் நிலை எதிர்வரும் வாரங்களில் மோசமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொற்றாளர்களின் நெரிசல் காரணமாக ஏனைய நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல பயப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவமனைகளில் தற்போது போதுமான ஒட்சிசன் இருந்தாலும், ஒட்சிசன் பற்றாக்குறை காரணத்தினால் சுமார் ஒரு வாரத்தில் பலர் இறந்துவிட வாய்ப்புக்கள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுப் போக்குவரத்தை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை மோசமடையலாம் என்று ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனத் அகம்பொடி செய்தித்தாளிடம் தெரிவித்தார், 

தொற்றுநோயால் மருத்துவமனை ஊழியர்களும் பாதிப்படைவதன் காரணமாக மருத்துவமனைகளின் நிலைமை மோசமாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.