ஊரடங்கு உதவித்தொகை இன்று முதல் - தகுதியானவர்கள் விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊரடங்கு உதவித்தொகை இன்று முதல் - தகுதியானவர்கள் விபரம்!

ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கான அரசின் ரூ. 2,000 உதவித்தொகை இன்று (23) முதல் வழங்கப்படுகிறது.

அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உரிய கொடுப்பனவை வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறைந்த வருமானம் கொண்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மட்டுமே அரசாங்கத்திடம் இருந்து உதவித்தொகையினை பெறமுடியும்.

அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள், சமுர்த்தி பயனாளிகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான அரசு மாதாந்திர கொடுப்பனவுகள் பெறுவிஒர் இதற்கு தகுதியற்றவர்கள் என்று பொருளாதார மறுவாழ்வு மற்றும் வறுமை ஒழிப்பு குறித்த ஜனாதிபதி பணிக்குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்து. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.