நாட்டில் தீவிரமாக அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று! அதிகப்படியான மரணங்கள் நேற்று பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் தீவிரமாக அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று! அதிகப்படியான மரணங்கள் நேற்று பதிவு!



நாட்டில் மேலும் 1,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 407,068 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இன்றையதினம் 3,390 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று 4,483 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,163 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 348,930 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 50,890 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


இதேவேளை, மேலும் 198 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதனடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7,948 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.