பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட அவசர அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட அவசர அறிக்கை!


சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் தெளிவூட்டி, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அஜித் ரோஹண தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவு, உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படம், அஜித் ரோஹணவுடையது கிடையாது என பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம், டிக்டொக் சமூக வலைத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை, விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அஜித் ரோஹண அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதுடன், அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.