அவளை இரண்டாவது முறையாக ஊடகங்களில் துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவளை இரண்டாவது முறையாக ஊடகங்களில் துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம்!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயமடைந்து உயிரிழந்த சிறுமி இஷாலினி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில், தனக்குத்தானே தீ வைத்ததாக வைத்தியரிடம் கூறியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக வைத்தியரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் சிறுமி சுயநினைவுடன் இருந்தாரா என்பதை அறிய மருத்துவரின் அறிக்கை முக்கியமானது என்று சுட்டிக்காட்டிய நீதவான், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீயில் எரிந்து மரணித்த சிறுமி கிஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கு நேற்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான மேலதிக மனறாடியார் நாயகம் திலீபா பீரிஸ், சிறுமியின் உடலில் 79% தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும், அப்போது அந்த பெண் மயக்க நிலையில் இருந்ததை பல மருத்துவர்கள் குறிப்பிட்டதாகவும் கூறினார்.

எனினும், சிறுமி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, ஒரு பொலிஸ் அதிகாரி அவரது அறிக்கையை வீடியோ பதிவு செய்ய சென்றிருந்தாலும், “என்னை அடிக்க வேண்டாம், போனை எடுக்காதே!" என கிஷாலினி கூறினாரே தவிர, தனக்குத்தானே தீ வைத்ததாக எதுவும் வெளியிடப்படவில்லை.

எனினும், அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், தனக்குத் தானே தீ வைத்ததாகக் கூறியதாக ரந்திகா என்ற மருத்துவர் பதிவு செய்தார். ஆனால், அந்த மருத்துவரிடம் ஒரு அறிக்கையைப் பெற பொலிசார் முயன்றபோது, ​​அவர் இங்கிலாந்துக்குச் சென்றது கவனத்திற்கு வந்தது.

எனினும், கொழும்பு குற்றப் பிரிவின் ஏஎஸ்பி நெவில் சில்வா நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், 

கொழும்பு தேசிய மருத்துவமனையின் இயக்குநர், அந்த மருத்துவருடன் இணைப்பை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்ததாக தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த பிரதி மன்றாடியார் நாயகம் திலீபா பீரிஸ், ஊடகங்கள் சிறுமியை இரண்டாம் நிலை துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தக் கூடாது என்று கூறினார். விசாரணை அறிக்கைகளை பொலிஸார் ஊடகங்களிடம் வெளியிடுவது புகழ் பெறுவதற்காகவே, எனவே இது தொடர்பில் உத்தரவொன்றை  பிறப்பிக்குமாறு கோரினார். இதனால் விசாரணைக்கு இடையூறு ஏற்படுமென்றும், இது அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடியது என்றும் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் செய்தித் தொடர்பாளரால் ஊடகங்களிற்கு வெளியிடப்படும் தகவல்களையே அவர் விசேடமாக குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் பொலிசாருக்கு நீதவான் அறிவுறுத்தல் வழங்கினார்.

அந்த சம்பவத்தின் போது, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ரிஷாத் குடும்பத்தினர் ஒரு பாதுகாப்பு அதிகாரியை அழைத்தார்கள். சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர்களுக்கு எந்த அவசரமும் இல்லை என்று குறிப்பிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

கோவிட் கடமைகளுடன் இணைந்த ஒரு உயர் போலீஸ் அதிகாரி, சிறுமியின் பெற்றோரை அமைச்சரின் வீட்டு அறைக்கு அழைத்து வந்தார். அங்கிருந்த மண்ணெண்ணெய் போத்தலைக் காட்டி மிரட்டினார். அது ஒரு வருடம் பழமையானது என்றும் மூடியை கூட திறக்க முடியாது என்றும் சொன்னார்.

இந்த பொருட்கள் குறித்து அரசாங்க ஆய்வாளரின் அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் தொடர்பாக நியாயமான சந்தேகம் இருப்பதாக பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

சிறுமி தனது அறையில் தீ வைத்து வீட்டிற்குள் உள்ள நீர்த்தொட்டிக்குள் இறங்கும் வரையான, வீட்டிலிருந்த எந்த பொருளும் சேதமடையவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது என்றார்.

இது உண்மையில் தற்கொலையா? ஒரு விபத்து? கொலையா? தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த போது, இருந்த மருத்துவரின் அறிக்கை தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

கொடுமை, மனிதக் கடத்தல் மற்றும் அடிமைத்தனம் தொடர்பாக பல சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தவர்களின் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாகவும், அவர்களில் பலர்  தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக புகார் தெரிவித்தனர்.

அவர் இறக்கும் வரை பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் அல்லது அடையாள அட்டையைப் பெற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார். மேலும், அந்த வீட்டின் சிசிடிவியை அரசு ஆய்வாளரிடம் ஒப்படைத்து அறிக்கை அளிக்குமாறு அவர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை கோரினர். எனினும், ஆதாரங்களை பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக அரச சட்டத்தரணிகள் கூறினர்.

ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, கலிங்க இந்ததிஸ்ஸ மற்றும் அனில் சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு சந்தேகநபர்களுக்காக ஆஜராகி சிறுமியை வேலைக்காரியாக பயன்படுத்துவது சட்டபூர்வமானது என்றும் வழக்கு தொடர வலுவான சான்றுகள் இல்லை என்றும் குறிப்பிட்டனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா பல வெளிநாடுகளின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டினார் மற்றும் கோவிட் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தங்கள் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி வழக்கறிஞர் கலிங்க இந்ததிஸ்ஸ தனது வாடிக்கையாளரை விடுவிக்குமாறு கோரியுள்ளார், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு வன்புணர்வு தொடர்பாக தனது வாடிக்கையாளருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்க முடியாத வழக்கு என்று சுட்டிக்காட்டினார்.

எனினும், பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஒரு தலைமை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இது ஆதாரங்களை மறைக்கும் முயற்சியாகும் என்றார். சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டால் அது வழக்கை பாதிக்கும் என்று அவர் கூறினார்.

“சட்டத்தை மீற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த சந்தேக நபர்களை விடுவிக்கச் சொல்ல எங்களிடம் வர வேண்டாம். செல்வந்தர்களின் அதிகாரத்தின் கீழ் ஒரு குற்றம் நடந்துள்ளதை நாம் அறிவோம். அவர் மீது வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது எமது கடமை“ என்றார்.

சந்தேகநபர்களை ஓகஸ்ட் 23 வரை தடுப்புக் காவலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களில் வெளியிட்ட தகவல்களை ஆராய்ந்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

-தமிழ் பக்கம்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.