அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கான அபராதத் தொகையை பல மடங்கு அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கான அபராதத் தொகையை பல மடங்கு அதிகரிப்பு!


நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ஒரு லட்சம் ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

இதன்படி, ஒன்லைன் ஊடாக நேற்று (09) இடம்பெற்ற அமைச்சரவை கலந்துரையாடலின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கான அபராதத் தொகை முன்னதாக 25 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட நிலையிலேயே, அதனை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிர்ணய விலையை மீறி பல்வேறு நபர்கள் பொருட்களை விற்பனை செய்வதாகவும், இதனால் தாம் மேற்கொண்ட தீர்மானதமானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

நுகர்வோரைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.