பாலத்தின் மேல் செல்ஃபி எடுக்கச்சென்ற நபர் கடலினுள் விழுந்து பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாலத்தின் மேல் செல்ஃபி எடுக்கச்சென்ற நபர் கடலினுள் விழுந்து பலி!

யாழ்ப்பாணம், பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்து நேற்று (08) மாலை காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பணியாற்றும் இவர், நேற்று மாலை தனது நண்பர்களுடன் பண்ணை இரண்டாம் பாலத்தில் ஏறிநின்று செல்பி எடுக்க முயன்ற வேளையில் நீரோட்டப் பாலத்தில் இருந்து தவறி கடலில் வீழ்ந்துள்ளார்.

காணாமல் போன இவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - நாவலர் வீதியைச் சேர்ந்த நபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நெடுந்தீவு கிழக்குப் பகுதியில் திருமணம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.