நாட்டை முழுவதுமாக முடக்காவிட்டால் இது தான் நடக்கும் - தொழிற்சங்கங்கள் அதிரடி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை முழுவதுமாக முடக்காவிட்டால் இது தான் நடக்கும் - தொழிற்சங்கங்கள் அதிரடி

நாட்டை முழுவதுமாக முடக்குவதற்கு அரசாங்கம் முடிவெடுக்கா விட்டால், அனைத்து தொழில்களிலும் உள்ள தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாட்டைப் பூட்டிக் கொள்ளும் என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

வரும் வெள்ளிக்கிழமையன்று அரசாங்கம் நாட்டை முழுவதுமாக முடக்கும் ஊரடங்கு விதிக்கப்படவில்லை என்றால், அனைத்து தொழிற்சங்கங்களும் திங்கட்கிழமை முதல் கூட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் எனவும் எச்சரித்துள்ளார்.

இது தொழில்முறை கோரிக்கைகளுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம் இல்லை. மாறாக நாட்டு மக்களை வீட்டிலேயே வைத்திருக்க எடுத்த நடவடிக்கை.

இந்த நேரத்தில் மருத்துவம் மற்றும் அறிவியலின் குரலுக்கு செவிசாய்ப்பது மட்டுமே செய்ய வேண்டும்.

இல்லையெனில் இந்த நாடு மிகவும் மோசமான சூழ்நிலைக்கு செல்லும் என்றார்.

அந்த வகையில், மருத்துவம் மற்றும் அறிவியலின் குரலைக் கேட்டு, இந்த நாடு முழுவதுமாக மூடப்பட வேண்டும். அதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அறிவியல் ரீதியாக 10 நாள் பூட்டுதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.