நாட்டில் பால் மாவுக்கான தட்டுப்பாடு ஏற்படாது என்று கால்நடை, பண்ணை ஊக்குவிப்பு மற்றும் பால் மற்றும் முட்டைத் தொழில்கள் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
கால்நடை பால் உற்பத்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் பால் தேவையில் 40 சதவிகிதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், தேவையான அளவு பால் தற்போது கிடைக்கிறது என்றும் திரவப் பாலை மக்களுக்கு பிரபலப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.
பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமோ எதிர்பார்ப்போ இல்லை என்றும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
கால்நடை பால் உற்பத்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் பால் தேவையில் 40 சதவிகிதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், தேவையான அளவு பால் தற்போது கிடைக்கிறது என்றும் திரவப் பாலை மக்களுக்கு பிரபலப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.
பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமோ எதிர்பார்ப்போ இல்லை என்றும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)