பவித்ராவை நீக்கவே அமைச்சரவையில் மாற்றம் - அவ்வாறே இராணுவதளபதியும் நீக்கப்பட வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பவித்ராவை நீக்கவே அமைச்சரவையில் மாற்றம் - அவ்வாறே இராணுவதளபதியும் நீக்கப்பட வேண்டும்!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியை பதவியில் இருந்து நீக்கும் நோக்கிலேயே அரசாங்கம் திடீர் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தெரிவித்துள்ளது.

கொரோனா ஒடுக்கும் செயல்முறையின் தோல்வியைக் காரணம் காட்டி சுகாதார அமைச்சர் நீக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி பணித் தளபதி அல்லது புலனாய்வு தலைவர்களின் பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்,

கொரோனா தொற்றுநோயை கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு கூறிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு சுகாதார அமைச்சை வழங்குவது ஒருபுறம் நகைச்சுவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா அலை வந்தபோது, ​​கொரோனாவைக் கட்டுப்படுத்தும் உயர் அதிகாரிகளை அரசு நீக்கியதாகவம் அவர் குற்றம் சாட்டினார்.

இன்று 6000 கொரானா இறப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளபோதிலும், கொரோனா தொடர்பாக முடிவுகளை எடுக்கும் பணிக்குழுவின் தலைவர்கள் தங்கள் பதவியை நன்றாக தக்க வைத்திருக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.