நாட்டில் ஒட்சிசன் பற்றாக்குறை - 95 தொன் ஒட்சிசன் அவசியம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் ஒட்சிசன் பற்றாக்குறை - 95 தொன் ஒட்சிசன் அவசியம்!

இலங்கையில் தற்போதைய கொவிட் பெருந்தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நாளாந்தம் 95 தொன் எடையுடைய ஒட்சிசன் வாயு தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டில் மருத்துவ தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசன் வாயுவின் மொத்த உச்ச வரம் 78 தொன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக தேவைக்காக வாராந்தம் 120 தொன் எடையுடைய ஒட்சிசன் வாயுவை இறக்குமதி செய்ய நேரிடும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசன் வாயு கையிருப்பு 300 தொன்னாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ தேவைக்கான ஒட்சிசன் வாயு இறக்குமதி செய்யப்படுவதாகவும் சுமார் 120,000 லீற்றர் ஒட்சிசன் வாயு இவ்வாறு இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக மேலும் 36000 லீற்றர் எடையுடைய ஒட்சின் இறக்குமதி செய்ய முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையில் அனுமதி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.