செப்டம்பர் 17 வரை நாடு தழுவிய முடக்கத்திற்கான கோரிக்கை!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

செப்டம்பர் 17 வரை நாடு தழுவிய முடக்கத்திற்கான கோரிக்கை!!!!

நாட்டை செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை முடக்கினால்தான், உயிர்களைப் பாதுகாக்க முடியும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி,

நாட்டில் எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை முடக்கநிலையை அமுலாக்கினால்தான் உயிர்களைப் பாதுகாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திரிபு தற்போது கொழும்பில் பரவிக் கொண்டிருக்கின்றது.இந்தத் திரிபு ஏனைய மாகாணங்களுக்கும் பரவிக் கொண்டிருக்கின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

மேலும் ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை முடக்கநிலையை அமுலாக்கினால், மேலும் 10 ஆயிரம் உயிர்களைப் பாதுகாக்க முடியும் என அரசாங்கத்துக்கு அறிக்கை ஒன்றின் ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், தற்போயை சூழ்நிலையில் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.

இதற்கு காரணம், பெரும்பாலான இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றது. ஆகையினால் அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே உரிய பாதையை நோக்கி பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.