அமெரிக்க தயாரிப்பான pfizer கொரோனா தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.
கட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலைய மூடாக இன்று (05) அதிகாலை 2.15 அளவில் குறித்த தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி,26 ஆயிரம் pfizer கொரோனா தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
தெற்காசிய நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிடம் இருந்து 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் தினுஷா தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஏனைய 1 லட்சத்து 74 ஆயிரம் pfizer தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.