பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பசில் ராஜபக்ச கூறிய விடயம் இதுதான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பசில் ராஜபக்ச கூறிய விடயம் இதுதான்!

பொருளாதாரத்தை மீட்டெடுக்க தடுப்பூசி நடவடிக்கைக்கு பின்னர் நாட்டை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார் என அரசாங்கமட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டார்.

இதன்போது நாட்டின் உற்பத்தித் தளத்தை புத்துயிர் பெற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதுடன் அவ்வாறு செய்யாவிட்டால் பொருளாதாரத்தை கொண்டு செல்லத் தேவையான பணம் இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் கட்டுப்படுத்தினால் நெருக்கடி நிலைமை அதிகரித்து வேலையின்மை மற்றும் வறுமை அதிகரிக்கும் என்றும் பசில் ராஜபக் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டினை முழுமையாக திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதேநேரம் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.