இவ்வருட உயர்தர பரீட்சைக்கான ஒன்லைன் மூல விண்ணப்பம் இன்று முதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இவ்வருட உயர்தர பரீட்சைக்கான ஒன்லைன் மூல விண்ணப்பம் இன்று முதல்!


2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சார்த்திகள் தங்களது விண்ணப்பங்களை இன்று (05) முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் தமது விண்ணப்ப படிவங்களை குறித்த காலப்பகுதியில் சமர்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, 2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றை வெகுவிரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்தாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.

செயன்முறை பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் ஒரு வார காலத்திற்குள் உறுதியான தீர்மானமொன்றை பரீட்சைகள் திணைக்களத்திற்கு வழங்குவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.