நாட்டில் தினமும் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று (28) 1,900 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுமார் 6 வாரங்களுக்குப் பிறகு நாட்டில் தினசரி இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணொக்கை 1,900 ஐத் தாண்டியுள்ளது.
கொரோனா மரணங்களில் பெரும்பாலானவை தடுப்பூசி செலுத்தப்படாத அல்லது ஒரு தடுப்பூசி அளவு (டோஸ்) இனை பெற்றுக் கொண்டவர்க்ளாக இருப்பதாகவும், முடிந்தவரை விரைவில் தடுப்பூசி பெறுவதன் முக்கியத்துவத்தை இராணுவ தளபதி வலியுறுத்தினார். (யாழ் நியூஸ்)