தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் இது தான் - வெளியான அதிர்ச்சித் தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் இது தான் - வெளியான அதிர்ச்சித் தகவல்!

தங்க ஆபரண உற்பத்தியாளர்கள் தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதன் காரணமாக போலி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்க ஆபரண உற்பத்தியாளர்கள் தங்களிடம் கைவசம் இருக்கும் தங்கத்தை பதுக்கி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாகவே ஒரு பவுண் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் தங்கத்தை இறக்குமதி செய்யும் அதிகாரம் இலங்கை வங்கிக்கு மட்டுமே காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.