உயர் கல்விக்காக வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கு கொரொனா தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த வேலைத்திட்டம் இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.army.lk/covid19 என்ற இணையதள முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது