இன்றைய தினம் (03) நாட்டில் 1251 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதன் அடிப்படையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 264,057 ஆக உயர்வடைந்தது.
மேலும் இன்று 1890 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 231,394 ஆக உயர்வடைந்தது. சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 29,506 ஆக ஆகும்.
மேலும் இன்று 34 கொரோனா மரணங்கள் பதிவானதை தொடர்ந்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 3,191 ஆக உயர்வடைந்தது. (யாழ் நியூஸ்)