நாட்டில் மேலும் 14 பேருக்கு இந்தியாவின் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் டெல்டா வகை வைரஸ் தொற்றாளர்கள் 5 பேர் இனங்காணப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்தது.
கொழும்பு, திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இருந்தே குறித்த டெல்டா திரிபு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
“வேகமாக பரவும் டெல்டா வைரஸானது இதுவரை தடுப்பூசி ஏற்றாதோருக்கும் ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் பாரிய அச்சுறுத்தலானது” என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர எச்சரித்துள்ளார்.
இதற்கு முன்னர் டெல்டா வகை வைரஸ் தொற்றாளர்கள் 5 பேர் இனங்காணப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்தது.
கொழும்பு, திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இருந்தே குறித்த டெல்டா திரிபு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
“வேகமாக பரவும் டெல்டா வைரஸானது இதுவரை தடுப்பூசி ஏற்றாதோருக்கும் ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் பாரிய அச்சுறுத்தலானது” என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர எச்சரித்துள்ளார்.