மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி போடுமாறு சுகாதாரத் துறைக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது, குறித்த வயதினருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் கொழும்பு மாவட்டத்தில் 60% ஆனோருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 47% ஆனோருக்கும், களுத்துரை மாவட்டத்தில் 34% ஆனோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஓடர் செய்யப்பட்ட தடுப்பூசிகளைப் பெற்றதுடன், முறையான திட்டத்தின் கீழ், செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதிக சதவீத தடுப்பூசிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கோவிட் சிறப்புக் குழுவுடன் நடந்த சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை முதல் மருத்துவமனைகளில் தடுப்பூசி தொடங்கப்பட்டதன் மூலம், ஏராளமான மக்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடிந்தது, நாடு முழுவதும் இந்த நடைமுறையைத் தொடர்ந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது, குறித்த வயதினருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் கொழும்பு மாவட்டத்தில் 60% ஆனோருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 47% ஆனோருக்கும், களுத்துரை மாவட்டத்தில் 34% ஆனோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஓடர் செய்யப்பட்ட தடுப்பூசிகளைப் பெற்றதுடன், முறையான திட்டத்தின் கீழ், செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதிக சதவீத தடுப்பூசிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கோவிட் சிறப்புக் குழுவுடன் நடந்த சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை முதல் மருத்துவமனைகளில் தடுப்பூசி தொடங்கப்பட்டதன் மூலம், ஏராளமான மக்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடிந்தது, நாடு முழுவதும் இந்த நடைமுறையைத் தொடர்ந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)