BREAKING: எதிர்வரும் 06 பசில் ராஜபக்ச அமைச்சராக பதவிப் பிரமாணம் - பல சலுகைகளும் எதிர்ப்பார்ப்பு!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: எதிர்வரும் 06 பசில் ராஜபக்ச அமைச்சராக பதவிப் பிரமாணம் - பல சலுகைகளும் எதிர்ப்பார்ப்பு!!!

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய ஶ்ரீலங்கா மக்கள் முன்னணியின் (மொட்டு சின்னம்) நிறுவனர் பசில் ராஜபக்ச எதிர்வரும்  6 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னர், அதே தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்பார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுங்கட்சியில் தேசிய பட்டியலுக்கான பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ச  பாராளுமன்றத்திற்கு நுழைய உள்ளார்.

பசில் ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்வதற்காக கட்சியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இராஜினாமா செய்ய உள்ளார்.

ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் இருந்த பசில் ராஜபக்ச, நேற்று காலை நாடு திரும்பினார். பசில் ராஜபக்ச அமைச்சராக பதவியேற்ற பின்னர் அதிகரித்த பெட்ரோல் விலையை 5 முதல் 7 ரூபாயும் டீசல் 3 முதல் 5 ரூபாயும் வரை குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பசில் ராஜபக்ச 2010-2015 வரை ராஜபக்ச அரசாங்கத்தில் பொருளாதார மேம்பாட்டு அமைச்சரவை அமைச்சராகவும் பணியாற்றினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.