அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய ஶ்ரீலங்கா மக்கள் முன்னணியின் (மொட்டு சின்னம்) நிறுவனர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 6 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னர், அதே தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்பார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுங்கட்சியில் தேசிய பட்டியலுக்கான பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு நுழைய உள்ளார்.
பசில் ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்வதற்காக கட்சியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இராஜினாமா செய்ய உள்ளார்.
ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் இருந்த பசில் ராஜபக்ச, நேற்று காலை நாடு திரும்பினார். பசில் ராஜபக்ச அமைச்சராக பதவியேற்ற பின்னர் அதிகரித்த பெட்ரோல் விலையை 5 முதல் 7 ரூபாயும் டீசல் 3 முதல் 5 ரூபாயும் வரை குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பசில் ராஜபக்ச 2010-2015 வரை ராஜபக்ச அரசாங்கத்தில் பொருளாதார மேம்பாட்டு அமைச்சரவை அமைச்சராகவும் பணியாற்றினார். (யாழ் நியூஸ்)
பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னர், அதே தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்பார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுங்கட்சியில் தேசிய பட்டியலுக்கான பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு நுழைய உள்ளார்.
பசில் ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்வதற்காக கட்சியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இராஜினாமா செய்ய உள்ளார்.
ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் இருந்த பசில் ராஜபக்ச, நேற்று காலை நாடு திரும்பினார். பசில் ராஜபக்ச அமைச்சராக பதவியேற்ற பின்னர் அதிகரித்த பெட்ரோல் விலையை 5 முதல் 7 ரூபாயும் டீசல் 3 முதல் 5 ரூபாயும் வரை குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பசில் ராஜபக்ச 2010-2015 வரை ராஜபக்ச அரசாங்கத்தில் பொருளாதார மேம்பாட்டு அமைச்சரவை அமைச்சராகவும் பணியாற்றினார். (யாழ் நியூஸ்)