கடன்கள், லீசிங் செலுத்துவோருக்கான மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடன்கள், லீசிங் செலுத்துவோருக்கான மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!


கொரோனா வைரஸ் நிலைமைகளால், வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொண்டவர்கள், லீசிங் செலுத்தி வருபவர்களுக்கு நிவாரணங்கள் தேவை என்றால், அது தொடர்பில் அந்தந்த நிறுவனங்கள், வங்கிகளுக்கு எழுத்துமூலமாக கோரிக்கை ஒன்றை விடுத்து நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென மத்திய வங்கி அறிவித்துள்ளது.


வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்துவோர், லீசிங் செலுத்தி வருவோருக்கு இம்மாதம் 21ஆம் திகதிக்கும் முன்பும், வங்கியற்ற நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெற்றுக்கொண்டோருக்கு இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்பும் நிவாரணங்கள் தேவை என்றால் எழுத்துமூலமாகக் கோரிக்கை விடுக்க வேண்டுமெனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது. 


கடன்களைப் பெற்றவர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாடொன்றுக்கு வர வேண்டுமென வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் மத்திய வங்கிய அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதில் ஏதாவது சிக்கல்கள் இருக்குமாக இருந்தால், 0112477966 எனும், மத்திய வங்கியின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிவிக்க முடியுமெனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.