மின்சார சபைக்குள் நிலவும் மாபியா! மின் கட்டணம் அதிகரிக்கப்படும் அபாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்சார சபைக்குள் நிலவும் மாபியா! மின் கட்டணம் அதிகரிக்கப்படும் அபாயம்!


மின்சார சபைக்குள் நிலவும் மாபியாவால் எதிர்வரும் நாட்களில் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் அபாயம் நிலவுவதாக இலங்கை மின்சார சபையின் பொது ஊழியர் சங்கம் தெரிவிக்கின்றது.


இது தொடர்பில் காலியில் நேற்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை மின்சார சபையின் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் மாலக்க விக்கிரமசிங்க இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

 

ஊழலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், சந்தர்ப்பவாத சங்கத்தினர் உள்ளிட்ட தரப்பினரை மின்சார சபை மாபியா என அழைக்கலாம் என குறிப்பிட்டார்.


இலங்கை மின்சார சபை சட்டமூலத்தின் 30ஆவது சரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான நிகழ்ச்சி நிரலை இந்த அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் மாலக்க விக்கிரமசிங்க தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.