39 மனைவிகள் 94 குழந்தைகள் கொண்ட நபர் உடல் நிலை மோசமாகி காலமானார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

39 மனைவிகள் 94 குழந்தைகள் கொண்ட நபர் உடல் நிலை மோசமாகி காலமானார்!


இந்தியாவின் மிஸோராம் மாநிலத்தின் பக்தவங்க் டிலாங்நுயம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜியான சனா. இவருக்கு 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 பேரக் குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணிப்பது கடினம் என்று கூறப்படுகிறது. பக்தவங்க் என்ற கிராமத்தில் நூறு அறைகள் கொண்ட நான்கு மாடி வீட்டில் அவர்கள் அனைவரும் வசித்து வந்தனர். இந்த வீடு அந்தப் பகுதியின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.


கடந்த சில மாதங்களாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஜியான, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நிலை மோசமானது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அவரின் மரணத்திற்கு, மிஸோராம் மாநில முதலமைச்சர் உட்பட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


உலகத்தின் மெகா குடும்பத்து தலைவர் என அழைக்கப்பட்ட மிஸோராமை சேர்ந்த ஜியான சனா மரணிக்கும் போது அவருக்கு வயது 76 என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.