கொரோனா வைத்தியம் செய்ய வீடுகளுக்கு சென்ற போலி வைத்தியர்கள் சிக்கினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா வைத்தியம் செய்ய வீடுகளுக்கு சென்ற போலி வைத்தியர்கள் சிக்கினர்!


வைத்தியர் என தெரிவித்து தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை வழங்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கெஸ்பேவ பொலிஸாரால் சந்தேக நபர்கள் நேற்று (02) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


பிலியந்தலை பகுதியை சேர்ந்த குறித்த நபர்கள், அப்பகுதியில் உள்ள வைத்தியரின் பெயரினை பயன்படுத்தி இவ்வாறு சிகிச்சை வழங்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.


சந்தேக நபர்கள் பேஸ்புக் பக்கமொன்றை உருவாக்கி இவ்வாறான மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்துவதாக தெரிவித்து 12 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்நிலையில், சந்தே நபர்கள் பயன்படுத்திய வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.