5 ஆயிரம் உதவித் தொகை பெற கத்தியுடன் சென்ற பெண் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

5 ஆயிரம் உதவித் தொகை பெற கத்தியுடன் சென்ற பெண் கைது!


அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபா உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள ஆயுதத்துடன் வந்த பெண் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.


காலி - ஹுங்கம பிரதேசத்தில் இன்று (03) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


வாக்கு இடாப்பில் தனது பெயரை சேர்க்கும்படி குறித்த பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவகரை மிரட்டுவதற்காக சம்பந்தப்பட்ட பெண் கூர்மையான கத்தி ஒன்றுடன் அங்கு அவரை சந்திக்க சென்றுள்ளார்.


இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டார்.


வாக்கு இடாப்பில் பெயர் இல்லாதவர்களுக்கு 5,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.