அனைவருக்கும் இலவச மரக்கறி?? அரசாங்கம் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைவருக்கும் இலவச மரக்கறி?? அரசாங்கம் அறிவிப்பு!


பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் காரணமாக பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள விவசாயிகளின் விளைச்சல்களைக் கொள்வனவு செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பல பிரதேசங்களில் பப்பாளி, வாழை, மரவள்ளி, மரக்கறி மற்றும் பழவகைகள் என்பவற்றை உற்பத்தி செய்திருந்தாலும், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்குக் காணப்படும் சிரமத்தினை கவனத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, கொள்வனவு செய்யப்படும் பொருட்களை, பொதுமக்கள் உட்பட கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுவரும் சுகாதார, பாதுகாப்பு பிரிவு ஊழியர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக  விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.