எரிபொருட்களின் விலை உயர்வானது, தேசிய பொருளாதாரம், வங்கி வட்டி விகிதங்கள், வெளிநாட்டு இருப்புகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தவும், பொதுமக்கள் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையாகுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம், அதனை பொறுப்பேற்று, உரிய அமைச்சர் பதவி விலக வேண்டுமென நேற்றையதினம் (12) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னர், இன்றையதினம் (13) ஊடவியலாளர் மாநாடொன்றை கூட்டிய வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, குறித்த முடிவு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை இணைந்தே எடுத்ததாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம், அதனை பொறுப்பேற்று, உரிய அமைச்சர் பதவி விலக வேண்டுமென நேற்றையதினம் (12) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னர், இன்றையதினம் (13) ஊடவியலாளர் மாநாடொன்றை கூட்டிய வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, குறித்த முடிவு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை இணைந்தே எடுத்ததாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.