பசில் ராஜபக்சவுக்காக பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்யும் ரஞ்சித் பண்டாரவுக்கு கிடைக்கப் போவது இது தான்!
Posted by Yazh NewsAdmin-
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு நுழைய அனுமதிக்க தேசிய பட்டியலில் இருந்து ஶ்ரீலங்கா மக்கள் முன்னணியால் (மொட்டு சின்னம்) நியமிக்கப்பட்ட ரஞ்சித் பண்டார இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய நிதி அமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யும் ரஞ்சித் பண்டாராவை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.