இலங்கை அருகில் தீப்பரவல் ஏற்பட்ட மற்றுமொரு கப்பலினால் இலங்கைக்கு பாதிப்பா? வெளியான மேலதிக தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை அருகில் தீப்பரவல் ஏற்பட்ட மற்றுமொரு கப்பலினால் இலங்கைக்கு பாதிப்பா? வெளியான மேலதிக தகவல்!

MSC MESSINA என்ற கொள்கலன் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளமையால் இலங்கையின் கடல் பிராந்தியத்திற்கு பாதிப்பு ஏதும் இல்லை என சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான சட்டத்தரணி, தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தீப்பற்றியுள்ள கப்பலுக்கு அண்மையில் பயணித்த வர்த்தக கப்பல் ஒன்று நேற்று, அதற்கு அருகில் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த இந்த கப்பல், சர்வதேச கடல் எல்லையில் தீப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

எனினும், அது இலங்கையின் மீட்பு வலயத்துடன் தொடர்புடையது என்பதனால், தற்போதைய கடல் வலயம் குறித்து, அனைத்து துறைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.