மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இன்றுவரை 591 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் கண்டி மாவட்டத்தில் 387 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 100 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 104 பேரும் இருக்கின்றனர்.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மத்திய மாகாணத்தில் 14 கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
அவர்களில் 06 பேர் கண்டியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் 06 பேர் நுவரெலியா மாவட்டத்தையும், 02 பேர் மாத்தளை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.