துமிந்த சில்வாவின் விடுதலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துமிந்த சில்வாவின் விடுதலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்!


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கொலை குற்றவாளி துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவித்ததை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்டித்துள்ளது.


"சக அரசியல்வாதியின் கொலைக்கு தண்டனை பெற்ற நிலையில் இருந்த முன்னாள் எம்.பி. துமிந்த சில்வாவின் ஜனாதிபதி மன்னிப்பு எனும் பேரில் விடுவிக்கப்பட்டது, தன்னிச்சையாக மன்னிப்பு வழங்கப்பட்டதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு, இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துகிறது மற்றும் பொறுப்புக்கூறலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது." என ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தனது ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளது.


முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுதலைகளையும் ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.