ஒரு வார காலத்திற்குள் இலங்கை அரசு அச்சிட்டுள்ள பணத்தொகை எவ்வளவு தெரியுமா? - அம்பலமான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரு வார காலத்திற்குள் இலங்கை அரசு அச்சிட்டுள்ள பணத்தொகை எவ்வளவு தெரியுமா? - அம்பலமான தகவல்!

இலங்கை அரசாங்கம் ஒரு வாரத்திற்குள் 22 பில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டுள்ளதாக இக்கொனொமிக்ஸ்ட் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒருவாரத்திற்குள்ளேயே இந்த பணம் அச்சிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 50 பில்லியன் ரூபாவை திரட்டுவதற்கான பிணைமுறிகளில் 60 சதவீதத்தையாகிலும் எவரும் கொள்வனவு செய்யவில்லை.

அதன் காரணமாக குறைந்துள்ள நிதியை ஈடுசெய்வதற்காக அரசாங்கம் பணம் அச்சிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தத் தொகையை அரசாங்கம் அச்சிடவிருந்தது.

எனினும் 400 மில்லியன் டொலர்களை சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியிருந்த காரணத்தினால் அப்போது அச்சிடுவதை இலங்கை தவிர்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.