
கடந்த 18ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒருவாரத்திற்குள்ளேயே இந்த பணம் அச்சிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 50 பில்லியன் ரூபாவை திரட்டுவதற்கான பிணைமுறிகளில் 60 சதவீதத்தையாகிலும் எவரும் கொள்வனவு செய்யவில்லை.
அதன் காரணமாக குறைந்துள்ள நிதியை ஈடுசெய்வதற்காக அரசாங்கம் பணம் அச்சிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தத் தொகையை அரசாங்கம் அச்சிடவிருந்தது.
எனினும் 400 மில்லியன் டொலர்களை சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியிருந்த காரணத்தினால் அப்போது அச்சிடுவதை இலங்கை தவிர்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.