மக்களே அவதானம்: டெல்டா திரிபு நாடு முழுவதும் பரவல்?????

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்களே அவதானம்: டெல்டா திரிபு நாடு முழுவதும் பரவல்?????

கொரோனா வைரஸின் ஆபத்தான திரிபுகளில் ஒன்றான டெல்டா திரிபு நாடு முழுவதிலும் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாடு முழுவதிலும் இந்த திரிபு பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் இந்த திரிபு பரவியிருக்கலாம் எனவும் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் பயணத்தடை அறிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் நடமாட்டம் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா திரிபு நோய் தொற்று பரவியவர்கள் ஊடாக சமூகத்தில் பலருக்கு தொற்று பரவியிருக்கக் கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே சமூகத்தில் இந்த நோய்த் தொற்று பரவுகை ஏற்பட்டிருக்கலாம் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.