பஸில் ராஜபக்ச நாடு திரும்பியதும் மக்களின் நெருக்கடிக்கு உடன் தீர்வு - எஸ் பி திசானாயக்க

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஸில் ராஜபக்ச நாடு திரும்பியதும் மக்களின் நெருக்கடிக்கு உடன் தீர்வு - எஸ் பி திசானாயக்க

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக எதிர் தரப்பினர் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முயற்சிப்பது பயனற்ற செயற்பாடாகும். நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையும் என்பதை எதிர் தரப்பினர் நன்கு அறிவார்கள். பொருளாதார காரணிகளை அடிப்படையாக கொண்டே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி திஸாநாயக்க தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 21 மாத காலமாக எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவில்லை. எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருந்தால் பொருளாதார மட்டத்தில் பாதிப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்கியதை தொடர்ந்தே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்ற விவகாரம் இன்று அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இவ்விடயம் குறித்து கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளன.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சியினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள். இது பயனற்ற செயற்பாடாகும். எரிபொருள் விலையேற்றத்தை அதிகரிக்கும் தீர்மானம் வலு சக்தி அமைச்சருக்கு கிடையாது என்பதை எதிர்தரப்பினர் நன்கு அறிவார்கள். அமைச்சரவை மட்டத்தில் எடுக்கப்பட்ட் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்த முடியாது என்றார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.