ரொனால்டோவின் செய்கையால் ரூ. 80 ஆயிரம் கோடி இழந்த கொக்கா கோலா நிறுவனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரொனால்டோவின் செய்கையால் ரூ. 80 ஆயிரம் கோடி இழந்த கொக்கா கோலா நிறுவனம்!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று (15) போர்ச்சுகல் மற்றும் ஹங்கேரி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 3 - 0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி ஹங்கேரியை வீழ்த்தியது. போட்டிக்குப் பிறகு போர்ச்சுகல் அணி கேப்டனும் கால்பந்தாட்ட ஜாம்பவானுமான ரொனால்டோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த கொக்க கோலா பாட்டில்களை நகர்த்தி வைத்துவிட்டு, தண்ணீர் பாட்டிலைக் கையிலெடுத்து போர்த்துகீசிய வார்த்தையையும் கூறினார். இதனால் கொக்கா கோலா நிறுவனத்துக்கு 4 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரொனால்டோ செய்கையால் கொக்க கோலா நிறுவனத்தின் பங்குகள் சரிந்து, இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 4 மில்லயன் டாலர் என்பது இலங்கை மதிப்பில் ஏறத்தாழ 80 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.