எதிர்வரும் 21 பயணத்தடை நீக்கப்பட்டதும் இவைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் 21 பயணத்தடை நீக்கப்பட்டதும் இவைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்!

கடுமையான நிபந்தனைகளுடனேயே பயணத்தடை நீக்கப்பட வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை நகைப்பிற்குரியதாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயணத்தடை அமுலில் ஏற்பட்டுள்ள தோல்விக்கு அதிகாரிகள் பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும், பல்வேறு சுற்று நிருபங்கள் மூலம் பல்வேறு தரப்பினரும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21ம் திகதி பயணத்தடை நீக்கப்பட்டாலும் கடுமையான சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். இந்த பயணத்தடை மற்றும் முடக்க முறைமை பயனற்றதாக மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களை மட்டும் குறை சொல்ல முடியாது எனவும், அதிகாரிகள் பயணத்தடை முறையில் பல்வேறு துளைகள் காணப்படுவதாகவும் அதனையே மக்கள் பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.