நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட டீசல் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 15 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை தனியார் பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வலுசக்தி அமைச்சருடன் பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததாக குறித்த சங்கத்தின் இணைப்புச் செயலாளர் டி.வி ஷாந்த சில்வா தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)