“மீண்டும் பயணத்தடை, தீர்மானங்களில் மாற்றம் ஏற்படலாம்” - இராணுவ தளபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“மீண்டும் பயணத்தடை, தீர்மானங்களில் மாற்றம் ஏற்படலாம்” - இராணுவ தளபதி!

தொடர்ந்து நாட்டை முடக்கி வைக்க வேண்டிய அவசியமில்லையென கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக பல்வேறு பயணத்தடை விதித்து நாட்டை முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கொரோனா தடுப்பு செயலணி மற்றும் சுகாதாரப் பிரிவு இணைந்து, நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நிலைமை தொடர்பில் ஆய்வு செய்து வருகிறது.

அதில் கிடைக்கும் தரவுகளுக்கமைய தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அவசியம் ஏற்பாட்டால் நாடு முழுவதும் மீண்டும் பயணத்தடை விதிக்கப்படலாமென இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலைமையில் அந்த அவசியம் இல்லை. தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் எதிர்வரும் நாட்களில் மாற்றமடைய வாய்ப்புகள் உள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.