
இதுபோன்ற சூழலில் தான் சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது ஐந்தாண்டு தடை விதிக்க வேண்டும் என்ற எண்ணம் இலங்கை கிரிக்கட் வாரிய (எஸ்.எல்.சி) அதிகாரிகள் மனதில் எழுந்துள்ளது. இந்த வீரர்களுக்கு ஒரு வருட தடை போதுமானது என்று சிலர் கூறிய போதும், எதிர்கால கிரிக்கட் வீரர்கள் மீது படிப்பினையொன்றாக ஐந்தாண்டு தடை விதிக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மையானவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் குறித்த மூவருக்கும் கடந்த கால தவறுகள் பல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
குற்றம் சாட்டப்பட்ட மூன்று வீரர்களும் நேற்று பிற்பகல் வரை இங்கிலாந்தில் இருந்ததோடு, அவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. (யாழ் நியூஸ்)