அஸ்டிராஸெனகா தடுப்பூசியின் முதலாம் டோஸ் இனை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் ஆக மொடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் குறித்த ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்தார்.
அதன்படி, அஸ்டிராஸெனகா தடுப்பூசியை முதல் டோஸாகப் பெற்ற அனைவருக்கும் மொடர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசியை இரண்டாவது டோஸ் ஆக வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மொடர்னா தடுப்பூசியானது இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்காக ஒப்புதல் வழங்கப்பட்டது. இரு வாரங்களில் ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை இலங்கைக்கு கிடைக்கப்பெற உள்ளது.
இலங்கையில் இன்னும் பயன்பாட்டில் இல்லாத மேலும் மூன்று தடுப்பூசி வகைகளை இலங்கை அரசு பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்தார்.
இப்புதிய வகைகளில் ஃபைசர் மற்றும் மொடர்னா ஆகிய தடுப்பூசிகளும் அடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை அரசானது சினோவாக் தடுப்பூசியையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று தடுப்பூசிகளும் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக பேராசிரியர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
இந்த நடவடிக்கைக்கு சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் குறித்த ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்தார்.
அதன்படி, அஸ்டிராஸெனகா தடுப்பூசியை முதல் டோஸாகப் பெற்ற அனைவருக்கும் மொடர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசியை இரண்டாவது டோஸ் ஆக வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மொடர்னா தடுப்பூசியானது இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்காக ஒப்புதல் வழங்கப்பட்டது. இரு வாரங்களில் ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை இலங்கைக்கு கிடைக்கப்பெற உள்ளது.
இலங்கையில் இன்னும் பயன்பாட்டில் இல்லாத மேலும் மூன்று தடுப்பூசி வகைகளை இலங்கை அரசு பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்தார்.
இப்புதிய வகைகளில் ஃபைசர் மற்றும் மொடர்னா ஆகிய தடுப்பூசிகளும் அடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை அரசானது சினோவாக் தடுப்பூசியையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று தடுப்பூசிகளும் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக பேராசிரியர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)