காட்டுப்பன்றி என நினைத்து நபர் சுட்டுக்கொலை! மாத்தளையில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காட்டுப்பன்றி என நினைத்து நபர் சுட்டுக்கொலை! மாத்தளையில் சம்பவம்!


மாத்தளை – ரத்தோட்டை பகுதியில் இன்று (08) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.


மிளகு பயிற்செய்கை காணிக்குள் அத்துமீறி நுழைந்த ஒருவர் மீது காணி உரிமையாளர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய நபர் துப்பாக்கியுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


காணிக்குள் காட்டுப்பன்றி நுழைந்துவிட்டதோ என்ற சந்தேகத்தில் தாம் பிரயோகம் செய்ததாக குறித்த நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கின்றார் என கூறப்படுகிறது.


எனினும் இதுதொடர்பில் பொலிஸார் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.