கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்ற பேருந்தைத் திருப்பிவிடுமாறு அறிவுறுத்தியதாக வெளியான அறிக்கைகள் முற்றிலும் தவறானவை என்றும் அவர் கூறினார்.
தனது மகனின் திருமணமும் குறித்த ஹோட்டலில் இடம்பெற்றதாக பரவி வரும் செய்தியும் பொய்யானது என்றும் தெரிவித்தார்.
பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள் மீது சிஐடியினர் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.